தமிழகத்தில் சனிக்கிழமை (டிச.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக சனிக்கிழமை (டிச.4) நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் மின் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்கு மின் கசிவு மற்றும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் கோளாறுகள் தான் முக்கிய காரணமாகின்றன. அத்துடன் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் அநேக இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. மேலும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பள்ளிகளும் மூடல் – முதல்வர் அதிரடி உத்தரவு!
இதன் விளைவாக இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையாக மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்கின்றது. இதனால் மின் விபத்துகள் ஏற்படுவது குறைந்து வருகிறது. அதனால் தமிழக அரசு மாதந்தோறும் இந்த மின் தடை அறிவிப்பை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து நாளை நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்! அமைச்சர் விளக்கம்!
மேலும் இதன் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளான நாகை, வேளாங்கண்ணி, நாகூா், வெளிப்பாளையம், திட்டச்சேரி, மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை, பூதங்குடி, நரிமணம், கொட்டாரக்குடி, வேளாங்கண்ணி நகரம், செருதூா், பரவை, திருமருகல், மருங்கூா், எரவாஞ்சேரி, திருப்புகளூா், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம், மாவட்ட ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா, திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.