மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பள்ளிகளும் மூடல் – முதல்வர் அதிரடி உத்தரவு!
டெல்லியில் அதிகரித்து வரும் மாசு அளவை கருத்தில் கொண்டு ஹரியானாவின் நான்கு என்சிஆர் மாவட்டங்களான சோனேபட், குர்கான், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என்று ஹரியானா அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
டெல்லியில் வியாழக்கிழமை நிலவரப்படி 41 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு விகிதம் 0.06 சதவிகிதம் ஆக உள்ளது என்று தேசிய தலைநகரின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் ஓமிக்ரான் வகை பரவல் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. தலைநகர் டெல்லியில் நவம்பர் மாதம் முதல் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் கடந்த மாதம் முதல் அங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்! அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில் நேற்று டெல்லியில் வானிலை மாறுபாடு காரணமாக பிற்பகலில் நகரம் முழுவதும் லேசான மழை காணப்பட்டது. இதனால் சராசரி காற்றின் தரம் ஒரு நாள் முன்பு ‘மிகவும் மோசமான’ இருந்ததில் இருந்து தற்போது ‘கடுமையான’ வகைக்கு குறைந்துள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. என்சிஆர் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் கருத்தில் கொண்டு, ஹரியானாவின் நான்கு என்சிஆர் மாவட்டங்களான சோனேபட், குர்கான், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என்று ஹரியானா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
கூடலூரில் டிச.7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!
புதிய கோவிட்-19 வகை ஓமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், மிகவும் அதிகமாக பரவியுள்ள ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வந்த மொத்தம் 10 பயணிகள் கோவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்துள்ளனர். கர்நாடகாவில் இரண்டு பேர் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களை இந்தியா தொடர்ந்து அனுமதிப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.