தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்! அமைச்சர் விளக்கம்!
நாடு முழுவதும் ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. அத்தகைய குழப்பத்தை தீர்க்கும் விதமாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றில் இருந்து படிப்படியாக மீண்டு சில மாதங்களாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வகையாக ஓமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் தொற்று இதுவரை உலகின் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கூடலூரில் டிச.7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்டு வருகின்றன. அதாவது ஓமைக்ரான் தொற்று பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் நபர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். இத்தகைய ஓமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்று மக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கியுள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 – தை முதல் நாள் தமிழ் புத்தாண்டா?
அப்போது அவர் ஓமைக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறதே தவிர இதுவரை எவ்வித உயிரிழப்புகளும் இல்லை. அந்த ஓமைக்ரான் தொற்றின் வீரியம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார். மக்கள் அனைவரும் முறையே தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறையை கடைபிடித்தாலே போதும் ஓமைக்ரான் தொற்று நம்மை நெருங்காது. மேலும் மாநிலங்கள் இடையே கட்டுப்பாடு மற்றும் பொதுமுடக்கம் உள்ளிட்டவைகளுக்கு தமிழகத்தில் இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ளார்.