தமிழகத்தில் டிச.18 ( ஞாயிறு) மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புமுகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் மாவட்ட வாரியாக நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை அளிக்க தமிழக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. அரசு துறைகளில் உள்ள பணிகளுக்காக தனியாக வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதேநேரத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த தனியார் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உதவும் பொருட்டு தனியார்நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகம் வாயிலாக நடத்தி வருகிறது.
தமிழகத்தில் அமையவிருக்கும் புதிய தொழிற்பூங்கா – அரசாணை வெளியீடு!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமை டிசம்பர் 18ம் தேதியான நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடத்துகிறது. இந்த முகாமில் தொழிற்பயிற்சி மற்றும் கடனுதவி போன்ற பல வாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளது. 18 வயது முதல் 35 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்