தமிழகத்தில் பிப்ரவரி 28 வரை பெற்ற கடன்கள் தள்ளுபடி – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பிப்ரவரி 28 வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், விடுபட்ட விவசாயிகளை இணைக்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு செயலாளர்கள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உழவர்களை தொடர்பு கொண்டு பயிர் கடனை திரும்ப செலுத்துமாறு வலியுறுத்தினர் . அவ்வாறு கடன்களை செலுத்திய பிறகு மீண்டும் பயிர் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். அதன்படி தொடக்க வேளாண் கூட்டுறவு செயலாளர்களின் உத்தரவின் படி விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை கூட்டுறவு வங்கிகளில் செலுத்தினர்.
தமிழக முதல்வரின் சிறந்த நடைமுறை விருதுகள் 2021 NSS – கருத்துகள் சேகரிப்பு!
ஆனால் கூட்டுறவு செயலாளர்கள் சொன்னது போல விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் வழங்கவில்லை. கூட்டுறவு சங்கத்தின் கடன் தொகையை குறைப்பதற்காக இது போன்ற அறிவிப்பை வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு சங்கத்தின் கடன் தொகையை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதனால் விவசாயிகள் இதை வன்மையாக கண்டித்தனர். மேலும் தொடர் போராட்டத்திற்கு பிறகு கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு மறு பயிர்கடன் மீண்டும் வழங்கியது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் ஜனவரி 31 ம் தேதி வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. தற்போது விடுபட்ட விவசாயிகளை சேர்க்கும் வகையில் பிப்ரவரி 28 வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்று வழங்கி மீண்டும் கடன் பெற உதவ வேண்டும். மேலும் நகை கடன் தள்ளுபடி செய்தவர்களுக்கு அவர்களின் நகையை ஒப்படைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.