தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – பொங்கல் போனஸ் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக அகவிலைப்படியை உயர்த்தி தருவதாக அரசு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பை அமல்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு
தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை உயர்த்தி தருவதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனை சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 14 சதவீதமாக உயர்த்தி வழங்க உள்ளதாக அறியப்படுகிறது. அதாவது 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 31 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றுக்கு முதல் பலி – வேகமெடுக்கும் பாதிப்பு! பொதுமக்கள் அச்சம்!
இதனால் 8,724 கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சி மற்றும் டி பிரிவு பணியாளருக்கு ரூ.3000 வழங்க உள்ளதாகவும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்க உள்ளதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளருக்கு பொங்கல் தின விழாவை முன்னிட்டு ரூ.500 வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 500 ரூபாயும் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜன.2ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இதற்காக 169.56 கோடி செலவு அரசுக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி அகவிலைப்படியை உயர்த்தி தருவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவுகிறது. இதனை நாளை முதல் அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு புத்தாண்டு தினத்தில் அகவிலைப்படி உயர்த்தி தருவதால் அரசு ஊழியர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.