தமிழகத்தில் ஜன.2ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து தற்போது சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வரும் ஜன.2ம் தேதி வரை தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. அந்த வகையில் தமிழகத்தில் சில பகுதிகளில் இயல்பான மழையை விட 2 மடங்கு கூடுதலாக மழை பதிவானது குறிப்பிடத்தக்கது. அதாவது கன்னியாகுமரி, கோவை, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக மழை பெய்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் இயல்பு அளவான 343.8 மி. மீ ஐ விட 97% அதிகமாக 678.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு கோரிக்கை!
மன்னார்குடி, கோட்டூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்றும் டிச.31ம் தேதி மற்றும் நாளை ஜன.1ம் தேதியும் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டி 5.8 கிமீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், டெல்டா மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் அதாவது நாகை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்று முதல் வரும் ஜன.2ம் தேதி வரை குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.