தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.18,536/-
தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும், அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | Counsellor |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:
ஆற்றுப்படுத்துநர் எனப்படும் Counsellor பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Counsellor வயது வரம்பு:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அரியலூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-07-2022 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Exams Daily Mobile App Download
ஆற்றுப்படுத்துநர் மாத சம்பளம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
TNRD கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.62,000/- || 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
கல்வி தகுதி:
- அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி / முதுநிலை பட்டதாரிகள் (10+2+ 3 Pattern) (உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்) படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் குழந்தைகள் சார்ந்த ஆற்றுப்படுத்துதல் பணியில் 1 ஆண்டு (தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள்) முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
Counsellor விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பம் https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 21/11/2022 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் – 621 704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.