ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 13, 2019
- ரயில்வே வாரியத்தின் 64 வது இரயில்வே விழா ஏப்ரல் 12, 2019 அன்று புது தில்லியில் உள்ள ரெயில் பவனில் நடைபெற்றது.
- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் சூரிய சக்தியால் இயக்கும் முதல் படகு விரைவில் இயக்கப்பட முயற்சி.
- டாக்டர் ரெட்டிஸ் ஆய்வுக்கூடத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜி.வி. பிரசாத்தை பெல்ஜியத்திற்கான கெளரவ தூதராக நியமனம் செய்துள்ளது.
- பேஸ்புக் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக கடந்த ஆண்டு $ 20 மில்லியனை செலவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
- 2 ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வங்கிகளின் விற்பனை நிலையத்தின் (PoS) சாதனங்களை 3G மற்றும் 4 G தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்த திட்டம்.
- சிட்டி யூனியன் வங்கி அதன் சுதந்திர இயக்குனரான ஆர்.மோகன் அவர்களே அடுத்த பகுதி நேர தலைவராக மே 4 முதல் செயல்பட வேண்டும் என RBI இடம் பரிந்துரைத்தது.
- மனித உடலில் விண்வெளி பயண விளைவுகள் குறித்த நுண்ணறிவுகளை நாசா ‘இரட்டையர் ஆய்வு’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது.
- ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்யாவின் உயர்ந்த குடிமகன் விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
- கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா முதல் மெய்நிகர் யதார்த்த மையத்தை (VRC) தொடங்கிவைத்தார்.
- இந்தியா, ASEAN இடையே கடல்சார் துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதற்கான உடன்பாடு
- சிங்கப்பூர் ஓபன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி பேட்மிட்டன் போட்டியில் உலக சாம்பியனான ஜப்பானின் நோஸ்மி ஒகுஹாரா, இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தேர்வானார்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்