நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 14,2020

0
நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 14,2020
நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 14,2020

தேசிய செய்திகள்

COVID-19 நிவாரண நிதியாக ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் உதவி வழங்கி உள்ளது

COVID-19 பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியா ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியை வழங்கியுள்ளது. இந்த உதவி ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • அதோடு இந்திய அரசு ஆன்டிகுவா மற்றும் பார்புடா அரசாங்கத்திற்கு 10,000 ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளையும் வழங்கியுள்ளது.
  • இந்திய உயர் ஸ்தானிகர் கே.ஜே.சீனிவாசன் மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகளை ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமர் காஸ்டன் பிரவுனிடம் வழங்கினார்.
COVID-19 க்கான தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழுவிற்கு டாக்டர் வி கே பால் தலைமை தாங்க உள்ளார்

COVID-19 க்கான தடுப்பூசி  குறித்த தேசிய நிபுணர் குழுவை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது, இந்த திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிட,பயனுள்ள தடுப்பூசியை அடையாளம் காணுதல், நிதி விநியோகம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றிக்கு தலைமை தாங்க டாக்டர் வி கே பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இந்தக் குழு 2020 ஆகஸ்ட் 12 அன்று முதல் செயல்பட தொடங்கியது.
கல்வி அமைச்சர் கட்டடக்கலை கல்வி விதிமுறைகள் 2020 ஐ வெளியிட்டார்

கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் 2020 ஆம் ஆண்டு புதுதில்லியில்  உள்ள கட்டிடக்கலை கவுன்சில் விதிமுறைகளை அறிவித்துள்ளார்.

  • இந்த விதிமுறைகள் நவம்பர் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரும்
  • இதன் படி, கட்டிடக்கலை படத்திட்டத்திற்கு குறைந்தபட்சம் 5 கல்வி ஆண்டுகள் அல்லது 90 செமஸ்டர்கள் 10 செமஸ்டர்கள் இருக்கும்.
மாலத்தீவில் இணைப்பு திட்டத்திற்காக இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலர் உதவி வழங்க உள்ளது

மாலத்தீவில் 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் மற்றும் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்துடன் பெரிய இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு நிதியளிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிவித்தார்.

  • மத்திய வெளிவிவகார அமைச்சர், மாலத்தீவின் பிரதிநிதியான அப்துல்லா ஷாஹித்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

AMRUT திட்ட தரவரிசையில் ஒடிசா தொடர்ந்து சிறந்த செயல்திறன்  அடிப்படையில் முதலிடம் வகிக்கிறது

AMRUT திட்டத்தின் கீழ் மாநிலங்களின் வீட்டுவசதி தரவரிசையை  நகரபுற  அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. ஒடிசா 85.67% மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

  • ஒடிசாவின் ஒன்பது நகரங்கள், அதாவது புவனேஷ்வர், சம்பல்பூர், கட்டாக்,  ரூர்கேலா, பத்ராக், பாலசோர், பாரிபாடா, பெர்ஹாம்பூர் மற்றும் பூரி ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் இடம் பெற்று இருந்தன. மாநிலத்தில் இன்று வரை சுமார் 2,400 கிலோ மீட்டர் குழாய் பதிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செய்திகள்
இஸ்ரேல் அதன் Arrow -2 பாலிஸ்டிக்  ஏவுகணையை  வெற்றிகரமாக  சோதனை செய்தது

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ், இஸ்ரேல் தங்கள் மேம்பட்ட  ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான Arrow -2 ஐ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அறிவித்தார், இது பல்வேறு ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இடைமறிப்பு ஏவுகணை  ஆகும்.

  • இதன் சோதனை இஸ்ரேலில் மத்தியதரைக் கடல் வழியாக ஏவுகணை சோதனை செயும் இடத்தில்  நடத்தப்பட்டது.

வங்கி செய்திகள்

ஃபெடரல் வங்கி, பின்செர்வ் (Finserv) உடன் கூட்டு சேர்ந்து,  அவர்களின் முதலாவது கடன் அட்டையை (Credit Card) வழங்கவுள்ளது

ஃபெடரல் வங்கி பின்செர்வ் நிறுவனத்துடன் சேர்ந்து கிரெடிட் கார்டை  வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது, ஃபெடரல் வங்கியின்  தனது முதலாவது கிரெடிட் கார்டைத் வழங்குவதற்கு பின்செர்வ் நிறுவனம் ஆதரவளிப்பதற்காக, இந்த கூட்டணி நடைபெற்று உள்ளது.

வணிக செய்திகள்

HAMCL & HL க்கு  இடையில்  கூட்டு நிறுவனம்  ஒன்றை உருவாக்க  CCI ஒப்புதல் அளித்துள்ளது

கீஹின் கார்ப்பரேஷன், நிசின் கோக்யோ கோ லிமிடெட், ஷோவா கார்ப்பரேஷன்  மற்றும் ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ் லிமிடெட் தாக்கல் செய்த மனு இந்திய போட்டி ஆணையத்தின் (சிசிஐ) ஒப்புதலைப் பெற்றுள்ளது.

  • ஹோண்டா மோட்டார் கோ லிமிடெட் (எச்.ஏ.எம்.சி.எல்) மற்றும் ஹிட்டாச்சி  லிமிடெட் (எச்.எல்) ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டு முயற்சியை உருவாக்க இரு நிறுவனங்களும் மனு தாக்கல் செய்துள்ளன.

பாதுகாப்பு செய்திகள்

இந்திய கடலோர காவல்படை  ரோந்து கப்பல் ‘சர்தக்’ ஐ நிறுவியது

இந்திய கடலோர காவல்படைக்கான ஒரு ரோந்து கப்பல் வடிவமைக்கப்பட்டு இந்திய கடலோர காவல்படை கப்பலான ‘சர்தக்’ என மறுபெயரிடப்பட்டது.

  • கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த கடலோர காவல்படையால் பயன்படுத்தப்பட்ட ஐந்து கப்பல்களின் வரிசையில் 4 வது இடத்தில் சர்தாக் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ விற்கு  ஏற்ப இதை கோவா ஷிப்யார்ட் லிமிடெட் வடிவமைத்து கட்டமைத்துள்ளது.

நியமனங்கள்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்திரா இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் சுபாஷ் ஷியோரதன் முந்த்ரா  இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸின் (ஐபிஹெச்) நிர்வாகமற்ற தலைவராக (non-executive chairman) நியமிக்கப்பட்டுள்ளார். அவர்  முன்பு  இயக்குநராக 2018 இல் ஐ.பி.எச் குழுவில் சேர்ந்தார்.

புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்

“Our Only Home: A Climate Appeal to the World” என்ற தலைப்பில்  புத்தகம் தலாய் லாமா புத்தகம் ஒன்றை  எழுதியுள்ளார்

திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா, காலநிலை மாற்றம் குறித்த புதிய புத்தகத்தை “Our Only Home: A Climate Appeal to the World” என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

  • இந்த புத்தகம் நவம்பர் 2020 இல் வெளியிடப்படும். இதை ஹனோவர் ஸ்கொயர் பிரஸ் வெளியிட்டுள்ளது.

முக்கிய நாட்கள்

உலக உறுப்பு தானம் தினம் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படுகிறது

உலக உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று உலகளவில்  அனுசரிக்கப்படுகிறது.

  • உறுப்பு தானம் என்பது ஒரு நன்கொடையாளரின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள, குடல், நுரையீரல் மற்றும் கணையம் போன்றவற்றை  நன்கொடையாளர் இறந்த பிறகு, உறுப்பு தேவைப்படும் மற்றொரு நபருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
  • இந்த நாள்  உறுப்பு தானம் பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது.
பிற செய்திகள்
மலையாள கவிஞர்-பாடலாசிரியர் சுனக்கார ராமன்குட்டி காலமானார்

மலையாள கவிஞர்- பாடலாசிரியர் சுனக்கார ராமன்குட்டி காலமானார். இவர் 76 திரைப்படங்களுக்கு 215 பாடல்களை எழுதியுள்ளார்.

  • இவர் 2015 ஆம் ஆண்டில் கேரள சங்கீதா நடக அகாடமியின் குரு ஸ்ரேஷ்டா  விருதைப் பெற்றவர்.
  • அவரது பாடல்களில் சியாமகேம் நீ , சிந்தூராதிலகவுமாய் , நீ அரிஞ்சோ மேலே  மனத், ஹிருதயவானியே கயிகாயோ ஆகியவை மிகவும் புகழ் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!