மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!
உத்தரகண்ட் மாநில அரசுத்துறை ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட DA தொகையை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு DA தொகை 17 முதல் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
DA உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை உயர்த்தப்பட்டதையடுத்து, சில மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான DA தொகையை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், உத்தரகண்ட் மாநில அரசுத் துறை பணியாளர்களுக்கான DA தொகையை உயர்த்தி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று மாநில அரசு ஊழியர்களின் DA தொகைக்கான முடக்கத்தை நீக்கி, 17 முதல் 28 சதவீதமாக உயர்த்தி அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம் – அரசாணை வெளியீடு!
இந்த அறிவிப்புக்கு உத்தரகண்ட் மாநில அமைச்சரவை நேற்று (செப்டம்பர் 24) ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் ஜூலை 1 முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் திருத்தப்பட்ட DA வைப் பெறுவார்கள் என்று அமைச்சரவை அமைச்சர் சுபோத் யுனியல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநில அரசு ஊழியர்கள் நிலுவைத் தொகையுடன் திருத்தப்பட்ட DA வை பெற உள்ளனர்.
தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளம் – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
அரசின் இந்த முடிவால் சுமார் 1,60,000 அரசு ஊழியர்கள் மற்றும் 1,50,000 ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விமான விசையாழி எரிபொருள் மீதான வாட் கட்டணத்தை 20 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்க உத்தரகண்ட் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனுடன் அக்டோபர் 2021 முதல் மார்ச் 31, 2022 வரை அம்மாநிலத்தின் ஏழு பொறியியல் நிறுவனங்களில் ஒப்பந்த ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது கூடுதல் தகவல்.
தமிழ்நாட்டுக்கும் தமிழ் மாநிலத்துக்கும் அரசு DA வை உயர்த்தாது