இன்ப அதிர்ச்சி..தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

0
இன்ப அதிர்ச்சி..தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
இன்ப அதிர்ச்சி..தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
இன்ப அதிர்ச்சி..தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அகவிலைப்படி உயர்வு:

புத்தாண்டை அனைவரும் சிறப்பாக கொண்டாடி வரும் வேளையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் பேரில் அகவிலைப்படி உயர்வு இன்றே அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார் நிலையில் மாநிலங்கள்.. இந்தியாவில் கொடிய XBB.1.5 வைரஸ் கண்டுபிடிப்பு.. கட்டுப்பாடுகள் அமல்!

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருக்கும் பொழுது கூட தொடர்ந்து ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அளித்துள்ள அகவிலைப்படி கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது,

அதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட அரசு முடிவு எடுத்துள்ளது’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 2359 கோடி கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!