தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – பிப்.8ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம்!
தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா பேரிடர் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையால் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி தொகையை நிறுத்தி வைத்துள்ளது. அந்த தொகையானது கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 2 கட்டமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – பான் இணைப்பு கட்டாயம்!
மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கியது. அந்த வகையில் தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடந்த மாதம் அரசு அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயரவால் அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக 8724 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஷாக் – உணவு வழங்கல் துறை அலுவலர் விளக்கம்!
இந்த நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ரேஷன் கடை ஊழியர்கள் மக்களுக்கான பணி செய்தனர். ஆனால் அவர்களுக்கு பயணசெலவு, ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து தற்போது அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதனை வலியுறுத்தி பிப்ரவரி 8ம் தேதி ரேஷன் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளனர்.