மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்வு காரணமாக ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகளவு உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வானது அவர்களின் வாழ்வாதாரத்தை தற்போது மாறி வரும் பொருளாதார நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள உதவும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் ஏ ஐ சி பி யை குறியீட்டு தகவல்களின்படி தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் 46 சதவீத அகவிலைப்படி உயர்வு பெற்று வருகிறார்கள்.
BARC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 – ரூ.11,730/- சம்பளம் || தேர்வு கிடையாது!
ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் படி நான்கு சதவீத அகவிலைப்படி பெறும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியை பெறுவார்கள். இதன் காரணமாக மாதம் தோறும் ரூபாய் 2140 அவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வாக கிடைக்கும். இது ஆண்டு அடிப்படையில் ரூபாய் 25,680 ஆக இருக்கும் என்று தெரிய வருகிறது.