மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி (DA) உயர்வு – அரசு சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 3% உயர்த்தி வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து இமாச்சல பிரதேச அரசும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு
கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுக்கு பொருளாதார ரீதியில் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தனர். அதனால் அரசுக்கு நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் வழங்கப்படும் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தற்போது அரசு ஊழியர்கள் 28% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தற்போது 3% உயர்த்தி 31% அகவிலைப்படியை பெறுவார்கள். இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநில நிறுவன தின விழாவில் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கலந்து கொண்டார். இவ்விழாவில் முதல்வர் கூறியதாவது, மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது அகவிலைப்படியில் 3 சதவீத உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம், மீண்டும் பள்ளிகள் திறப்பு? அரசு இன்று ஆலோசனை!
அத்துடன் தற்போது ஓய்வூதியம் பெற ஆண்டு வருமானம் ரூ.35000லிருந்து ரூ.50000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 2015ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்ற ஊழியர்களுக்கு இணையான அதிக ஊதியத்தை பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2015ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களுக்கும் 2020 ம் ஆண்டு முதல் அதிகம் ஊதியம் பெறுவார்கள். ஆனால் ஒப்பந்த அடிப்படையிலான பணிபுரிவர்களுக்கு பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஊதியம் கிடைக்கும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.