தமிழகத்தில் மாண்டாஸ் புயல் தீவிரம் – இந்த மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காது! போக்குவரத்து துறை அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது மான்டாஸ் புயல் தீவிரம் எடுத்துள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேருந்துகள் இயங்காது:
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மாண்டாஸ் புயல் தற்போது சென்னையில் இருந்து 520 கி.மீ தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. அதனால் அதிக காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதனால் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கபீர் புரஸ்கார் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!
Exams Daily Mobile App Download
மேலும் பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த புயலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பொது மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் . தற்போதைக்கு கடற்கரைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலால் பலத்த காற்று வீசும் என்பதால் மரங்களின் கீழ் மக்கள் நிற்க வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.