ஆகஸ்ட் 30 முதல் சென்னையில் சுங்கக்கட்டண வசூல் நிறுத்தம் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஓஎம்ஆர் சாலை, பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடி கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் அரசின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர். தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அமேசான் நிறுவனத்தில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – 2025 ஆம் ஆண்டுக்குள் திட்டம்!
ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம் என விளக்கமளித்துள்ளது. மேலும் கட்டணம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. வாகன ஓட்டிகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சென்னை ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்க உள்ளதால் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓஎம்ஆர் சாலை, பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தம் செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அந்த வழி செல்லும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.