கொச்சியில் ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்டம் துவக்கப்பட்டது
பி.பி.சி.எல் கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தில் பெட்ரோ கெமிக்கல் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேம்பாட்டுத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
பொது சேவை மையங்கள் கந்த், முராதாபாத்தில் முதல் பணம் மற்றும் கேரி ஸ்டோரை அறிமுகப்படுத்துகிறது.
2019 உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்பை நடத்தும் உரிமையை இஸ்ரேலிய வீரர்கள் பங்கேற்க அனுமதிக்க மறுத்ததால் மலேசியா இழந்து விட்டது.
புவி வெப்பமடைவதை தடுக்க அவசர நடவடிக்கையாக பெல்ஜியத்தில் காலநிலை அணிவகுப்பு நடைபெற்றது.
‘உத்தரா தேவி’ கொழும்பு – கங்கசந்துரை இரயில் இந்தியாவிலிருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட லோக்கோமோட்டிவ் பவர் செட்டை இலங்கை ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்.
இந்திய விவசாய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) விவசாய கல்வியை வலுப்படுத்துவதற்காக நாட்டின் விவசாய வேளாண் கல்வி திட்டத்தை (NAHEP) அறிமுகப்படுத்துகிறது.
நாட்டின் இரண்டாவது வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) ஜார்கண்டிலுள்ள பாரஹியில் நிறுவப்பட்டது.
இந்திய உணவுத் துறை மற்றும் இந்திய தரக்கட்டுப்பாடுகளின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக, பெங்களூரில் ஒருங்கிணைந்த குழு ஆலோசனை குழுக் கூட்டம் நடைபெற்றது.
புலிகள் பாதுகாப்பு குறித்த 3 வது சர்வதேச மாநாடு புது தில்லியில் துவங்கியது.
2019 ஜனவரி 29 ஆம் தேதி மும்பையில் ஜவுளித்துறை அமைச்சகம் டெக்னிக்கல் ஜவுளி பற்றிய தேசியக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
இந்திய இரயில்வே உள்நாட்டிலேயே தயாரான ட்ரெயின் 18க்கு – வந்தே பாரத எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டுள்ளது.
குடியரசு தின நிகழ்ச்சியின் சிறப்புகளை அனைத்து மக்கள் காணும் நோக்கத்துடன், பாதுகாப்பு அமைச்சகம் ‘RDP இந்தியா 2019’ என்ற மொபைல் செயலியை தொடங்கி வைத்தது.
7 வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ரபேல் நடாலை வீழ்த்தி நோவக் ஜோகோவிக் வென்றார்.
உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்த ஆசிய வீரர் எனும் சாதனை படைத்தார் நவோமி ஒசாகா.
இந்தியாவின் கார்திக் சர்மா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நியூ சவுத் வேல்ஸ் ஆண்கள் அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றார் .
வேலம்மாள்-ஏஐசிஎஃப் சர்வதேச பெண்கள் கிராண்ட் மாஸ்டர் சுற்று-ராபின் செஸ் போட்டி சென்னையில் தொடங்க உள்ளது.
கரோலினா மரின் காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து விலகியதால் சாய்னா நேவால் தனது முதல் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார்.