நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 07,08 2019
TNPSC Group 4 OnlineTestSeries 2019
தேசிய செய்திகள்
38வது உலக யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பிங்க் சிட்டி ஜெய்ப்பூர் தேர்வு
- அசர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 43 வது அமர்வின் போது, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கக்கோரிய இந்தியாவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது.
- 2017 ஆம் ஆண்டின் பல்வேறு யுனெஸ்கோ வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஜெய்ப்பூர் நகரத்தின் பரிந்துரை வெற்றிகரமாக செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலக பாரம்பரிய தளமாக ஜெய்ப்பூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 38 உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன, அவற்றில் 30 கலாச்சார தளங்கள், 7 இயற்கை தளங்கள் மற்றும் 1 கலப்பு தளம் உள்ளன.
2030 ஆண்டளவில் 50 லட்சம் கோடி ரூபாயை ரயில்வேயில் முதலீடு செய்ய அரசு திட்டம்
- ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், 2030 ஆம் ஆண்டளவில் ரயில்வேயில் 50 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மும்பையிலிருந்து கோவா வழியாக மங்களூரு செல்லும் முழு கொங்கன் ரயில் பாதையும் 11,000 கோடி ரூபாய் செலவில் மின்மயமாக்கப்படும் என்று திரு கோயல் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் உர மானியம் ரூபாய் 10,000 கோடி உயர்வு
- மத்திய பட்ஜெட்டில் உரத்திற்கான மானிய ஒதுக்கீடு சுமார் 10,000 கோடி ரூபாய் உயர்வு கண்டுள்ளது. உரங்கள் மானியத்திற்கான அதிகரித்த இந்த ஒதுக்கீடு விவசாயிகளின் மானிய பரிமாற்றத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவும் என இரசாயன மற்றும் உர அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்தார். இந்த மானியம் நேரடியாக விவசாயிகளின் கணக்கிற்கு நேரடி மானிய உதவி திட்டம் (டிபிடி) மூலம் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசம்
கர்னூல் மாவட்டத்தில் ஒன்பது புதிய எஃப்.பி.ஓக்கள் அமைக்கப்பட உள்ளன
- கர்னூல் மாவட்டத்தில் ஒன்பது புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) அமைக்க தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) 102 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. அவற்றில் இரு அமைப்புகள் மீன் வளத்தை ஊக்குவிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்னூலில் இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல பிரதேசம்
மத்திய அரசு இட்டாநகரில் மூன்று சிறந்த விளையாட்டு மையங்களை அமைக்க உள்ளது
- அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் மூன்று சிறந்த விளையாட்டு மையங்களை மத்திய அரசு விரைவில் அமைக்க உள்ளதாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். மேலும் இவ்விளையாட்டு மையம் தற்காப்பு கலைகள், பளு தூக்குதல் மற்றும் குத்துச்சண்டைக்கான பிரத்யேக சிறப்பு மையமாக இருக்கும் என திரு ரிஜிஜு கூறினார்.
சர்வதேச செய்திகள்
இந்த ஆண்டு ஹஜ்ஜில் பெண்கள் சமத்துவத்திற்கான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டது
- சவூதி அரேபியாவிற்கு இந்தியர்கள் ஹஜ் பயணமானது ஏராளமான இந்தியா ஹஜ் யாத்ரீகர்களை சென்றடைவதற்கான இந்திய அரசின் பெருமுயற்சி திட்டமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டது.
- இந்தியன் ஹஜ் தகவல் அமைப்பு செயலி – தூதரகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் கருத்து மற்றும் குறைகளை தெரியப்படுத்தலாம். மேலும் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதர்கள் யாத்ரீகர்களுடன் ஒரு தொடர்பை உருவாக்கும் முயற்சியாக இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை மேம்படுத்த மற்றும் தொந்தரவில்லாத ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநாடு
சர்க்கரை மாநாடு 2020
- மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்த சர்க்கரை மாநாடு 2020 புனேயில் தொடங்குகிறது. இந்திய சர்க்கரைத் தொழிலில் உள்ள கொள்கை வகுப்பாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் இடையில் ஒரு திறந்த உரையாடலை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில்துறையின் முக்கியஸ்தர்கள் இடையே முக்கிய அமர்வுகள் மற்றும் குழு விவாதங்கள் நடைபெறும்.
திட்டங்கள்
புதுச்சேரியில் சைக்கிள் பகிர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
- புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சைக்கிள் பகிர்வு திட்டத்தை ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பதிவுசெய்த பயனர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் சைக்கிள்களைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லலாம். சைக்கிள்ளை எந்தவொரு நிறுத்தத்திலும் எடுத்துக்கொண்டு நிறுத்திக்கொள்ளலாம்.
தரவரிசை
ஐ.சி.சி தரவரிசை
- இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்திய ஐ.சி.சி தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரில் ஐந்து சதம் அடித்ததைத் தொடர்ந்து 2 வது இடத்தைப் பிடித்தார் ரோஹித் சர்மா. பாகிஸ்தானின் பாபர் ஆசாம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு செய்திகள்
போலந்தில் குட்னோ தடகளம்
- போலந்தில் நடைபெறும் குட்னோ தடகளத்தொடரில் பெண்கள் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமா தாஸ் முதலிடம் பிடித்து தனது இரண்டாவது சர்வதேச தங்கத்தை வென்றார். ஹீமா97 வினாடிகளில் பந்தய தூரத்தைக்கடந்து தங்கம் வென்றார், வி.கே. விஸ்மயா 24.06 வினாடிகளில் கடந்து வெள்ளி வென்றார். ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 21.18 வினாடிகளில் பந்தய தூரத்தைக்கடந்து தேசிய சாதனை படைத்த வீரர் முகமது அனாஸ் தங்கம் வென்றார்.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 07,08 2019 video – Click Here
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்