நடப்பு நிகழ்வுகள் – 9 ஏப்ரல் 2023
தேசிய செய்திகள்
2022 இல் சுற்றுலா மூலம் இந்தியாவின் அந்நிய செலாவணி வருவாய் 107% உயர்ந்துள்ளது
- சுற்றுலா மூலம் இந்தியாவின் அந்நியச் செலாவணி வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2022ல் 107% அதிகரித்து ₹1.34 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
- சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை (FTAs) 2021 இல்2 லட்சத்தில் இருந்து 2022 இல் 61.9 லட்சமாக அதிகரித்துள்ளது.
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கடலுக்குள் 30,000 மெகாவாட் திறன்கொண்ட காற்றாலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளது
- மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் அமைச்சகம் ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதிகளில் கடலுக்குள் 30 ஜிகாவாட் (30,000 மெகாவாட்) திறன் கொண்ட காற்றாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக அமைச்சகம் நியமித்துள்ளது.
- இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 2 ஜிகாவாட் (2000 மெகாவாட்) திறன்கொண்ட காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. கடலுக்குள் அமைக்கப்படும் காற்றாலைகளில் 15 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.கடலுக்குள் குறிப்பிட்ட தொலைவில் அவை நிறுவப்படும்.
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- இந்த புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், விமான நிலையத்தின் பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும். மேலும் தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்டதாகவும், இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக் கிராமமான கிபித்தூவில் ‘அதிர்வுமிக்க கிராமங்கள் திட்டத்தை’ (Vibrant Villages Programme) அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைக்கிறார்.
- மத்திய உள்துறை அமைச்சரும், ஒத்துழைப்பு அமைச்சருமான திரு அமித் ஷா ஏப்ரல் 10, 2023 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமமான கிபித்தூவில் ‘அதிர்வுமிக்க கிராமங்கள் திட்டத்தை’ தொடங்கி வைக்கிறார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2022-23 நிதியாண்டுகளுக்கான ரூ.4800 கோடியின் மையக் கூறுகளைக் கொண்ட ‘அதிர்வுமிக்க கிராமங்கள் திட்டத்திற்கு’ (VVP) இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 455 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஹைதராபாத் குகட்பல்லியில் சூரிய சக்தியில் இயங்கும் ‘துணிப்பை ஏடிஎம்’ நிறுவப்பட்டுள்ளது
- ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் உள்ள ஐடிபிஎல் பழச் சந்தைப் பகுதிக்கு அருகில் துணியால் செய்யப்பட்ட கேரி பேக்குகளை வழங்கும் சூரிய சக்தியில் இயங்கும் ‘துணிப் பை ஏடிஎம்’ நிறுவப்பட்டுள்ளது.
- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வுகள்
800 ஆண்டு பழமையான பாண்டியர் கால சிற்பம் கண்டுபிடிப்பு
- தமிழகத்தில் நரிக்குடி நாலூர் அருகே வயல்வெளிகளில் 800 ஆண்டுகள் பழமையான இடைக்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த துர்க்கை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்த சிற்பம் முட்டிவரை மண்ணில் புதைந்து, 4 அடி உயரத்தில் உள்ளன, ஒரு பெரிய பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கி உள்ளனர். தலையில் பல அடுக்குகளைக் கொண்ட கரண்டமகுடம் காணப்படுகிறது. நீண்ட காதுகளில் அணிகலன்கள், கழுத்தில் ஆபரணம் மார்பில் சன்னவீரம் பொறிக்கப்பட்டுள்ளது. அவை சற்று சேதமடைந்து காணப்படுகிறது.
விளையாட்டு செய்திகள்
பெண்கள் பினாலிசிமா போட்டியில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.
- முதல் முறையாக மகளிர் ஃபினாலிசிமா கால்பந்து போட்டி வெம்ப்லியில் நடைபெற்றது. பிரேசிலுக்கு எதிரான இந்த போட்டியில் 4-2 என்ற கணக்கில் இங்கிலாந்தின் க்ளோ கெல்லி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆகியது. வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வென்றது. கோபா அமெரிக்கா ஃபெமினா போட்டியின் சாம்பியனும், யுஇஎஃப்ஏ மகளிர் சாம்பியன்ஷிப்பில் வாகை சூடிய அணியும் இந்தப் போட்டியில் மோதியது குறிப்பிடத்தக்கது.
உலக செஸ் துவக்கம்
- சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் மே 2 வரை நடக்கவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானின் அஸ்தானாவில் துவங்கியது. இத்தொடரில் உலகின் நம்பர்-1 வீரரான நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், நம்பர்-2 வீரரான, ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி மோத இருந்தனர்.
- ஆனால் கார்ல்சன், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை. இதனால் கேண்டிடேட்ஸ் தொடரில் இரண்டாவது இடம் பெற்ற நம்பர்-3 வீரரான சீனாவின் டிங் லிரென், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார். இந்த தொடரில் மொத்தம் 14 சுற்றுகள் நடக்க உள்ளது.
வங்கதேசம் மிர்பூர் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது
- வங்கதேச அணி அயர்லாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தேசிய ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டி நடைபெற்றது.
- இதில் முதல் இன்னிங்சில் அயர்லாந்து 214 ரன் மற்றும் வங்கதேசம் 369 ரன் எடுத்தன. 155 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் விளையாடிய அயர்லாந்து, 3ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன் எடுத்திருந்தது. முதல் இன்னிங்சில் 126 ரன், 2வது இன்னிங்சில் 51 ரன் ஆடிய முஷ்பிகுர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
முக்கிய தினம்
கொசோவோ அரசியலமைப்பு தினம்
- கொசோவோ அரசியலமைப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 9 அன்று அனுசரிக்கப்படுகிறது. கொசோவோவின் அரசியலமைப்பு கொசோவோ மக்களால் அங்கீகரிக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு விடுமுறை தினத்தை குறிக்கிறது.
- ஒரு சிறிய நிலப்பரப்பு பிரதேசம், கொசோவோ செர்பியா, அல்பேனியா, மாசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய நாடுகளின் எல்லையாக உள்ளது.