நடப்பு நிகழ்வுகள் – 17 மார்ச் 2023
தேசிய செய்திகள்
நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் புதுமைகளை மேம்படுத்துவதற்காக RBI மற்றும் UAE மத்திய வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மத்திய வங்கி ஆகியவை நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் புதுமையை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இதன் படி, இரு மத்திய வங்கிகளும் டிஜிட்டல் நாணயங்களை ஆராய்வதற்காகவும் , CBUAE மற்றும் RBI ஆகியவற்றின் CBDC களுக்கு இடையே இயங்கும் தன்மையை ஆராய்வதற்காகவும் இணைந்து செயல்பட உள்ளது.
PLI திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஃகு அமைச்சகம் கையெழுத்திட உள்ளது.
- எஃகு அமைச்சகம், சிறப்பு எஃகுக்கான PLI திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட புது தில்லி உள்ள விஞ்ஞான் பவனில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
- இந்த நிகழ்வின் போது 20 துணை பிரிவுகளை உள்ளடக்கிய 27 நிறுவனங்களிடமிருந்து 57 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.
சர்வதேச செய்திகள்
உலகின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் முன்னணியில் சிங்கப்பூர்
- உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடிராக்ஸ் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூரின் ஷாங்கி விமானநிலையம் முதலிடத்தை பெற்றுள்ளது.
- இதனை அடுத்து தோஹா விமானநிலையம், டோக்கியோவின் ஹனீடா விமான நிலையம், சியோலின் இங்கியோன் விமான நிலையம், பாரீஸின் சார்லஸ் டி கெல்லி விமானநிலையம் போன்றவை இடம் பெற்றுள்ளன.
கடல் டிராகன் 23 பயிற்சி
- அமெரிக்க கடற்படை நடத்தும், கடல் டிராகன் 23 என்ற கூட்டுப் பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய கடற்படையின் விமானம் அமெரிக்காவின் குவாம் நகரை சென்றடைந்தது. எதிரி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான இந்தத் தொலைதூர பயிற்சி மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.
- இந்தப் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் P8I, P8A பிரிவு விமானங்கள் பங்கேற்கும் அமெரிக்கா, ஜப்பான், கனடா, கொரியா ஆகிய நாடுகள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளன.
மாநில செய்திகள்
கோவா முதல்வர் செயற்கை நுண்ணறிவு போக்குவரத்து நிர்வாகத்தை தொடங்கிவைத்தார்.
- கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், வடக்கு கோவாவின் மெர்சஸ் மாநிலத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை அமைப்பைத் தொடங்கிவைத்தார்.
- இந்த புதிய அமைப்பின் நோக்கம், போக்குவரத்து இயக்கத்தை கண்காணித்து, அதற்கேற்ப சிக்னல்கள் வழியாக போக்குவரத்தை அனுமதிக்கும். இது ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப வழியை தர இயலும்.
நியமனங்கள்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகிறார் எரிக் கார்செட்டி
- இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டியை நியமிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.இவரை 2021ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார்.
- லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயரான எரிக் கார்செட்டி அமெரிக்காவின் 100 ஆண்டு கால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
விமானப்படையின் உதவி செயலாளராக பதவியேற்ற ரவி சவுத்ரி.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சவுத்ரியை அமெரிக்க விமானப்படையின் உதவி செயலாளராக அமெரிக்க செனட் நியமித்துள்ளது.
- ரவி சௌத்ரி வணிக விண்வெளி போக்குவரத்து பணிகளின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்குரிய பொறுப்பில் பணியாற்றியுள்ளார். இவர் விமானப்படையின் உதவி செயலாளராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்கர் ஆவார்.
விருதுகள்
எழுத்தாளர் சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது
- 2022 ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் இலக்கிய விருதுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘சூரிய வம்சம் – நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் சரஸ்வதி சம்மான் இலக்கிய விருதை கே.கே.பிர்லா அறக்கட்டளை 1991-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
விளையாட்டு செய்திகள்
உலக மகளிர் குத்துச்சண்டை டெல்லியில் தொடக்கம்
- பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் 65 நாடுகளை சேர்ந்த 324 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளார்கள்.
- நீது கங்காஸ், நிகாத் ஜரீன் , சாக்ஷி சவுத்ரி, பிரீத்தி , மனீஷா மவுன் , ஜாஸ்மின் லம்போரியா , சாஷி சோப்ரா, மஞ்சு பம்போரியா , சனமாசா சானு , லவ்லினா , சவீதி பூரா , நுபுர் ஷியோரன் ஆகிய இந்திய வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். கடந்த முறை இந்தியா 1 தங்கம் உள்பட 3 பதக்கம் பெற்று இருந்தது.
முக்கிய தினம்
பூல்டே திருவிழா
- இது உத்தரகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாக்களில் ஒன்று.
- குழந்தைகள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதால் பூல்டே நிகழ்வு லோக் பால் பர்வ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 14 அல்லது 15 ஆம் தேதி அதாவது சைத்ரா மாதத்தின் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது.