ஜனவரி 31 வரை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஜார்க்கண்ட் அரசு சனிக்கிழமையன்று மாநிலத்தில் அமலில் உள்ள COVID-19 கட்டுப்பாடுகளை ஜனவரி 31 வரை நீட்டித்ததாக தலைமைச் செயலாளர் சுக்தேவ் சிங் அவர்கள் அறிவித்து உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஓமைக்ரான் பாதிப்புகள் தீவிரமெடுத்து வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட்டில் ஜனவரி 3 முதல் நடைமுறையில் உள்ள தற்போதைய கட்டுப்பாடுகளின் கீழ், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும், இரவு 8 மணிக்குப் பிறகு பார்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மூடப்படும். அதே நேரத்தில் அதிகபட்சம் 100 பேர் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 34% ஆக உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
மாநிலத்தில் COVID-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், அரங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஜனவரி 31 வரை மூடப்படும். வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடைபெறும், ஆனால் நிர்வாகப் பணிகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களில் 50% திறனுடன் செய்யலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக அதிகரிப்பு? ஜாக்பாட் அறிவிப்பு!
திரையரங்குகள், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்கள் 50 சதவீத திறனுடன் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத வருகையுடன் செயல்பட வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.