மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக அதிகரிப்பு? ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7- வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி இம்மாதம் 26ம் தேதிக்குள் ஊதிய உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. அந்த தொகையானது நோய் தடுப்பு பணிகளுக்கு செலவிடப்பட்டது. பிறகு தடுப்பூசிகளின் பயன்பட்டால் கொரோனா குறைந்து நாடு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி இரண்டு கட்டங்களாக உயர்த்தப்பட்டு தற்போது 31% அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2021 ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 75.31 லட்சம் பேர் – ஷாக் ரிப்போர்ட்!
கடந்த மே மாதம் முதல் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத்தொகை 2022 ஜனவரி மாதம் வழங்கபடும், இதனால் ஊழியர்கள் 2 லட்சம் வரை அகவிலைப்படி தொகையை பெறுவார் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர். அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசாக மேலும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அகவிலைப்படி உயர்ந்தால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் 34% அகவிலைப்படிவின் ரூ.6,120 சம்பளம் கூடுதலாக கிடைக்கும்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் பொங்கலுக்கு பிறகு நடக்கப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!
இந்த நிலையில் சம்பள உயர்வு குறித்த அறிவிக்கலாம் வெளியான வண்ணம் உள்ளது. பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருந்து வரும் சம்பள உயர்வு 7வது ஊதிய குழு பரிந்துரைத்துள்ளது இதனடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் 18,000 லிருந்து 26 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது. அனைவருக்கும் 8 ஆயிரம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும். வரும் ஜனவரி 16ம் தேதிக்குள் சம்பள உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.