ஜூன் 14க்கு பின்னர் 8 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில முதல்வர் உத்தரவு!!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா மாவட்ட ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
கர்நாடகா மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, 2,15,525 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜூன் முதல் வாரத்தில் சராசரியாக சிக்கமகளூரு மாவட்டத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 25.17% ஆகவும், மைசூரு மாவட்டத்தில் 22% ஆகவும் உள்ளது. மாநிலத்தில் பெலகாவி, சிக்மகளூரு, தட்சிணா கன்னடம், ஹாசன், மைசூரு, மண்டியா, சிவமோகா மற்றும் துமகுரு ஆகிய எட்டு மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு மறுவாய்ப்பு – தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு!!
இதனால் முதல்வர் எடியூரப்பா எட்டு மாவட்டங்களின் துணை ஆணையர்களுடன் ஆலோசனை கூட்டத்தை வீடியோ மூலம் நடத்தினார். இந்த மாவட்டங்களில் 65,000 பேர் தற்போது தொற்றினால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும், குணமடைவோரின் விகிதம் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர வேண்டுமாறு ஆணையர் மற்றும் துணை ஆணையர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகளை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மைக்ரோ-கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்கவும், அதிக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு விகிதத்தை 5%க்கும் கீழ் குறைவாக்க நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டுள்ளது. ஆர்டி-பி.சி.ஆர் சோதனையின் முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Ooradandu avasiyam thevai ellaiendral siramam dhan …corona marubadiyum than velaiyai kattum edhu makaluku puriya vendum