தமிழக சுகாதாரத்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி – அரசாணை வெளியீடு!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னும் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை வசூலிக்காமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளதால் தற்போது அந்த கல்லூரி முழுவதும் தமிழக அரசு சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி:
தமிழக அரசின் கீழ், அரசு மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள் என பல கல்லூரிகள் செயல்ப்பட்டு வருகின்றன. அவற்றில் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் உள்ளன. அவைகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம், அரசு கல்லூரிகளில் ரூபாய் 13,170 ஆயிரமும், பல் மருத்துவ கல்லூரிகளுக்கு ரூபாய் 11,170 வசூலிக்கப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்களின் சம்பள பதிவு இணையதள மேம்பாடு – நிதித்துறைக்கு கோரிக்கை!!
இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு சில ஆண்டுகள் ஆன நிலையில் அவற்றில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதில் புணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு தரப்பில் ஊதியம் வழங்கப்பட்டாலும் சில தனியார் கல்லூரிகளை போல் மாணவர்களிடம் இருந்து கட்டணம் பெறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றங்களில் 40 சதவீத காலிப்பணியிடங்கள் – மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்!!
இந்த நடைமுறைக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் முடிவில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மாணவர்கள் சிலர் அளித்த புகார் காரணமாக 51 நாட்கள் போராட்டத்திற்கு பின் தற்போது ராஜா முத்தையா கல்லூரி தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள 113.21 ஏக்கர் நிலம், மாணவர் விடுதி, ஆசிரியர் குடியிருப்புகளும் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்