தமிழக வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கைகள் – பிப்.17 முதல் வேலை நிறுத்தப் போராட்டம்!!

0
தமிழக வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கைகள் - பிப்.17 முதல் வேலை நிறுத்தப் போராட்டம்!!
தமிழக வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கைகள் - பிப்.17 முதல் வேலை நிறுத்தப் போராட்டம்!!
தமிழக வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கைகள் – பிப்.17 முதல் வேலை நிறுத்தப் போராட்டம்!!

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோபிச்செட்டிபாளையம் கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறையினர் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்:

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதாரத்தை சரி செய்யும் விதத்தில் ஜாக்டோ – ஜியோ போராட்டப் பாதிப்புகளை சரி செய்யவும், பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்தவும், வருவாய்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோபிச்செட்டிபாளையம் கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகா அலுவலகத்தில் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து 200க்கு மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 அம்ச கோரிக்கைகள்:

ஜாக்டோ – ஜியோ போராட்டம் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.வருவாய்துறையில் காலியிடங்களை நிரப்ப பணி வரன் முறை உருவாக்க வேண்டும். வருவாய்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஜனவரி 29 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நல அலுவலர் அறிவிப்பு!!

பணியார்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும். பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். பதிவறை எழுத்தர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஓட்டுநர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். ஊதியம் வழங்குவதில் முரண்பாடுகள் இருந்தால் அதனை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டன.

கோவில்பட்டியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இந்த செயல்பாடுகளுக்கும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சேலத்தில் கோரிக்கை மாநாடு நடத்தவுள்ளதாகவும், பின் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!