பிரதமரின் புதிய அமைச்சரவையில் 42% பேர் மீது கிரிமினல் வழக்குகள், 90% பேர் கோடீஸ்வரர்கள்!

0
பிரதமரின் புதிய அமைச்சரவையில் 42% பேர் மீது கிரிமினல் வழக்குகள், 90% பேர் கோடீஸ்வரர்கள்!
பிரதமரின் புதிய அமைச்சரவையில் 42% பேர் மீது கிரிமினல் வழக்குகள், 90% பேர் கோடீஸ்வரர்கள்!
பிரதமரின் புதிய அமைச்சரவையில் 42% பேர் மீது கிரிமினல் வழக்குகள், 90% பேர் கோடீஸ்வரர்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களில் 42% பேர் கிரிமினல் வழக்கு உடையவர்கள் என அதிர்ச்சியளிக்கும் விதமான ஒரு அறிக்கையை ADR வெளியிட்டுள்ளது.

புதிய அமைச்சரவை:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு சில முக்கிய விரிவாக்கங்களை செய்த நிலையில் மத்திய அமைச்சரவையில் பல புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அந்த வகையில் மத்திய அமைச்சரவையில் தற்பொழுது பதவியேற்றுள்ள 78 அமைச்சர்களில், குறைந்தது 42% பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) கருத்துக் கணிப்பின் புதிய அறிக்கை கூறுகிறது. குறிப்பாக புதிய அமைச்சர்களில், நான்கு பேர் மீது கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் இருப்பதாக அறிக்கை விளக்கியுள்ளது.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 10 நாட்கள் விடுப்பு!

கடந்த 7 ஆம் தேதி அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, பிரதமர் மோடி புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்களுக்கு தனிப்பட்ட இலாகாக்களை ஒதுக்கினார். முன்னதாக மத்திய அமைச்சரவையில் மொத்தம் 15 அமைச்சர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 28 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரதமர் மோடியின் அமைச்சர்கள் குழுவில் மொத்தம் 78 உறுப்பினர்கள் உள்ளனர். தொடர்ந்து புதிய அமைச்சரவையில் பதவியேற்றுள்ள 33 அமைச்சர்கள், அதாவது 42% பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக அமைச்சர்களின் தேர்தல் பிரமாணப்பத்திரங்களை மேற்கோளிட்டு காட்டிய ADR, குற்ற வழக்குகள் சாட்டப்பட்ட அமைச்சர்களில் சிலர் கொலை, கொலை முயற்சி அல்லது கொள்ளை ஆகிய செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இந்த ADR என்பது ஒரு தேர்தல் உரிமைக் குழுவாகும். இது தேர்தல்களுக்கு முன்னதான அறிக்கை, அரசியல்வாதிகளின் குற்றவியல், நிதி மற்றும் பிற பின்னணி விவரங்களை வழங்குகிறது. அதன் படி புதிய மத்திய அமைச்சரவையில் சுமார் 90% உறுப்பினர்கள் (70 பேர்) கோடீஸ்வரர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் மொத்த சொத்துக்கள் 70 கோடிக்கும் அதிகமாகும்.

TN Job “FB  Group” Join Now

அதாவது அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா (379 கோடி), பியூஷ் கோயல் (95 கோடி), நாராயண் ரானே (87 கோடி) மற்றும் ராஜீவ் சந்திரசேகர் (64 கோடி) உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் ‘உயர் சொத்து அமைச்சர்கள்’ என ADR ஆல் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதாவது அவர்களது சொத்து மதிப்பு 50 கோடிக்கு மேல் இருக்கிறது. அடுத்து 16.24 கோடிக்கு அதாவது மிகக்குறைந்த சொத்துக்களை, திரிபுராவை சேர்ந்த பிரதிமா பூமிக் (6 லட்சம்), மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜான் பார்லா (14 லட்சம்), ராஜஸ்தானை சேர்ந்த கைலாஷ் சவுத்ரி (24 லட்சம்), ஒடிசாவை சேர்ந்த பிஷ்வேஸ்வர் துடு (27 லட்சம்), மகாராஷ்டிராவை சேர்ந்த வி.முரளீதரன் (27 லட்சம்) வைத்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!