தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு கடன் வசதி – முழு விவரம் !!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில் கொரோனவால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட குடும்பத்திற்கு கடன் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்கும் திட்டம்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஆதிதிராவிடர் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் இறந்திருப்பின் அவர்களின் குடும்பம் வாழ்வாதாரம் முன்னேறும் வகையில் NSFDC நிறுவனத்தால் ASHA என்ற திரும்ப செலுத்த கூடிய கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மற்றும் அத்திட்டத்திற்காக வரைவு வழிகாட்டுதல் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அவை,
- பயனாளிகள் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3/00 இலட்சத்திற்கு உள்ளே இருக்க வேண்டும்.
- குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய இறந்தவரின் வயது 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும்.
- இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம்.
- திட்டத்தொகை 80 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை கடன் NSFDC நிறுவனத்தால் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
- மீதமுள்ள 20 சதவிகிதம் ரூ 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
- இக்கடனுக்கு ஆண்டு 6.5 சதவிகிதம் என்ற வட்டி விகிதத்தில் கடனை 6 ஆண்டுகளுக்கு திரும்ப செலுத்தலாம்.
- குடும்பத்தில் வருமானம் ஈட்ட கூடியவர் கொரோனா தொற்றினால் தான் இறந்துள்ளார் என ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் உள்ளவற்றிற்கு சம்மந்தமாக சான்றுகள், சாதி சான்று, வருமான சான்று, இறப்பு சான்று மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை பெற்று தங்கள் அலுவலகத்தில் வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.