கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் இடைவெளி 12 முதல் 16 வாரங்கள் நீட்டிப்பு – மத்திய அரசு ஒப்புதல்!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்ட் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 12-16 வாரங்களுக்கு நீட்டிக்க தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி) பரிந்துரைத்ததை அடுத்து மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
கோவிஷீல்ட் கோவிட் -19 தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க தடுப்பூசி மட்டுமே தற்போது ஒரே ஆயுதமாக உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி) கோவிஷீல்ட் கோவிட் -19 தடுப்பூசியில் உள்ள இரண்டு தவணை தடுப்பூசிகளுக்கான கால இடைவெளியை 12-16 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. அதே நேரத்தில் கோவாக்சின் தடுப்பூசி அளவுகளின் இடைவெளியில் எந்த மாற்றமும் பரிந்துரைக்கப்படவில்லை.
10, 12ம் வகுப்பு திறந்தவெளி பள்ளி தேர்வுகள் தள்ளிவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
அதே போல பாரத் பயோடெக்கின் தடுப்பூசிகளுக்கு இடையே எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக உள்ள நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட் 12 வார இடைவெளியில் அளவுகளை வழங்கினால் 81.3% செயல்திறனைக் கொண்டு செயல்படுவதாகவும், ஆறு வாரங்களுக்கும் குறைவான இடைவெளியில் செலுத்தப்பட்டால் 55.1% செயல்திறன் மட்டுமே கொண்டு செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு என்.டி.ஏ.ஜி பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்