தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு – நீதிமன்ற உத்தரவு!
தமிழகத்தில் விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி சமீபத்தில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த மனு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்றியும் வருகிறது. அதன்படி கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடன், நகைக்கடன் ஆகியவற்றைத் தள்ளுபடி செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்றும் அறிவித்திருந்தார்.
பிப்ரவரி 14 முதல் மழலையர் பள்ளிகள் & ப்ளே ஸ்கூல்கள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!
இதை தொடர்ந்து கூட்டுறவுவங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் பட்டியலை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி. தற்போது தள்ளுபடி செய்வது குறித்த நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மதுரை உயர் நீதிமன்றம் ஏற்குமா அல்லது தள்ளுபடி செய்யுமா என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்த நிலையில் இன்று அதற்கான பதில் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் விவசாய நகைக்கடன் வைத்திருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கூடிய விரைவில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட அரசாணையை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.