தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கலந்தாய்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு ஒத்திவைப்பு:
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணி மாறுதல், பதவி உயர்வு போன்றவற்றிற்கு கலந்தாய்வு நடத்தப்படும். இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் திறக்கப்படததால் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதமும் அதிகரித்துள்ளது. அதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளது.
பிப்ரவரி 20ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு – தேர்தல் எதிரொலி!
இந்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நடப்பு ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஆராய்ந்து பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டமிடபட்டது. கலந்தாய்வில் பங்கு பெறும் ஆசிரியர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. அதன்படி 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் அரசு பள்ளி ஆசிரியர்கள், தற்போதைய பணியில் கட்டாயம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தொடர்ந்து கசியும் வினாத்தாள்கள்!
இந்த நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு இருந்த பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் மாறுதல் கலந்தாய்வு குறித்தும் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.