தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தொடர்ந்து கசியும் வினாத்தாள்கள்!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு - தொடர்ந்து கசியும் வினாத்தாள்கள்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு - தொடர்ந்து கசியும் வினாத்தாள்கள்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தொடர்ந்து கசியும் வினாத்தாள்கள்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களின் கணிதம் மற்றும் மற்றும் புள்ளியியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் இருந்து வினாத்தாள் கசிந்துள்ளதாக புகார்கள் எழுந்து வருகிறது.

வினாத்தாள் கசிவு:

தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் அடுத்தடுத்த கொரோனா அலைகளால் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகள் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருவதால் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் உருவானது. இந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் அரசின் அனுமதியுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. கொரோனா பரவல் சுழலை கருத்தில் கொண்டு பள்ளிகளில் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலுக்கிணங்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தொடர்ந்து 5 மாதங்கள் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. முதல் கட்டமாக திருப்புதல் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டது. ஜனவரி மாதம் திருப்புதல் தேர்வு நடத்தப்பட கொரோனா மூன்றாம் அலை அச்சுறுத்ததால் மீண்டும் நேரடி வகுப்புகளுக்கு தடை செய்யப்பட்டது. இந்த திருப்புதல் தேர்வு தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பதல் தேர்வு வினாத்தாள் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிப்.16 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

நேற்று 10ம் வகுப்பு அறிவியல் 12ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் கசிந்தது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 12ம் வகுப்பு மாணவர்களின் கணிதம் மற்றும் மற்றும் புள்ளியியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேர்வுத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கசிந்துள்ள வினாத்தாள்களை கொண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!