பிப்ரவரி 20ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு – தேர்தல் எதிரொலி!
பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20ம் தேதியன்று சட்டசபை தேர்தல் நடத்தப்பட இருப்பதால், அனைத்து தொழில்துறை நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2022ம் ஆண்டில் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், ஹிமாச்சல் பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்திலும் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநில அரசு, அனைத்து தொழில்துறை நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு – அரசு அதிரடி அறிவிப்பு!
இது தொடர்பாக பஞ்சாப் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘சட்டசபை வாக்குப்பதிவு தேதியான பிப்ரவரி 20ம் அன்று, மாநிலத்தில் அமைந்துள்ள மற்றும் தேர்தலில் வாக்களிக்க உரிமையுள்ள எந்தவொரு வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனம் அல்லது பிற நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நபர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாள் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பணியாளர் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தொடர்ந்து கசியும் வினாத்தாள்கள்!
அந்த வகையில் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கத்துடன் வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.