தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு – இன்று (ஜூலை 25) முதல் தொடக்கம்!
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (ஜூலை 25) தொடங்க இருக்கிறது.
கலந்தாய்வு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த வாரம் தரவரிசைப் பட்டியல் வெளியானது. முன்னதாக அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் உயரும் மின் கட்டணம் – மின்வாரியம் அறிவிப்பு!
இன்று (ஜூலை 25) காலை 10 மணி முதல் வருகிற ஜூலை 31 ஆம் தேதி வரை 7 நாட்கள் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக பொதுப்பிரிவினருக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்விற்கு தரவரிசை பட்டியலில் 25,856 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அழைப்புவிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த கலந்தாய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதே போல சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 27 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.