தமிழகத்தில் மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட கவுன்சிலிங் திட்டம் – உயர்நீதிமன்றம் பாராட்டு!

0
தமிழகத்தில் மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட கவுன்சிலிங் திட்டம் - உயர்நீதிமன்றம் பாராட்டு!
தமிழகத்தில் மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட கவுன்சிலிங் திட்டம் - உயர்நீதிமன்றம் பாராட்டு!
தமிழகத்தில் மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட கவுன்சிலிங் திட்டம் – உயர்நீதிமன்றம் பாராட்டு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தொடங்கப்பட்ட கவுன்சிலிங் திட்டம் குறித்து உயர்நீதிமன்றம் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் தமிழகத்தில் தான் முதல் முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து பள்ளிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இரண்டு வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து காணப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக ஸ்மார்ட் வகுப்புகள், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறது. மேலும் இந்த திட்டம் பெற்றோர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

UAN, PPO எண்ணை பதிவிறக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம் – EPFO உறுப்பினர்களுக்கான அறிவிப்பு!

இதனை தொடர்ந்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவைகளை நடத்தி மாணவர்களின் செயல்திறனை அதிகரித்து வருகிறது. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் தனியார் பள்ளிகள் அவர்களது பள்ளியினை பெருமை படுத்துவதற்காக மாணவர்களின் மீது அதிக பாட சுமையை திணிக்கின்றனர். இதனால் மாணவர்கள் மனதால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதை அடுத்து ஒரு சில மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் விதமாக கவுன்சிலிங் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இத் திட்டத்தை கொண்டு வந்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!