இந்தியாவில் மீண்டும் கோரத்தண்டவமாடும் கொரோனா பாதிப்பு – ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தொற்று பாதிப்பு 300ஐ கடந்துள்ளது. அதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்களும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வந்த நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 700 – ஐ நெருங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது நான்காம் அலையின் தாக்குதலாக இருக்குமோ என்று அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது.
Exams Daily Mobile App Download
மே மாத தொடக்கத்தில், தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, இரண்டு இலக்க எண்ணில் மட்டுமே பதிவானது. தற்போது 3 இலக்கத்தை தொட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு – தகவல் வெளியீடு!
தடுப்பு பணியின் தீவிரமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கபட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்த, முதல்வருடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேன்மைக்கும் தொற்றால் பாதிக்கப்படுவோருடன் தொடர்பில் இருக்கும் அனைவரையும் கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டால் தொற்று பரவலை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.