நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. பள்ளிகள் மூடல் – குழப்பத்தில் சீன அரசு!
கொரோனாவின் தாயகமான சீனாவில் பூஜ்ஜிய கொள்கை அமல்படுத்தப்பட்டு பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சீனாவில் குவாங்ஷு மாகாணத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டி படைத்த கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பல வளர்ந்த நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல நாடுகளில் கொரோனாவின் வீரியம் குறைந்தாலும் இன்னும் கொரோனா முற்றிலும் இல்லை என்ற நிலைமை வரவில்லை. அந்த வகையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்பதால் பூஜ்ஜிய கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் ஒரு சில கட்டுப்பாடுகள் பல மாநிலங்களில் அமலில் இருந்து வந்தன. இந்நிலையில் சீனாவில் குவாங்ஷு மாகாணத்தின் மக்கள் தொகை 18 லட்சம் ஆக உள்ளது. அந்த மாகாணத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் சீனாவில் தென்மேற்கு நகரம் ஒன்றில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் தரம் குறைந்த துவரம் பருப்பு விநியோகம் – உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, சீனாவில் 11,773 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 10,351 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது. சீனாவின் மக்கள் தொகையை வைத்து பார்த்தால் இந்த பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு தான். ஆனாலும் சீனாவில் பூஜ்ஜிய கொள்கை அமலில் இருப்பதால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தற்போது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.