தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரம்? மத்திய அரசு அறிவுரை!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 19,406 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் கொரோனாவால் ஏகப்பட்ட பாதிப்புகள் முன்னதாக வந்த நிலையில் அதன் பின் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. அந்த வகையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக டில்லி, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. அதனால் அந்த மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை திருத்த 8வது ஊதிய குழு? அமைச்சர் பதில்!
அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தகுதி இருக்கும் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன், 5 வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் இன்னும் சில மாதங்களில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 205.92 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்பதால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.