மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை திருத்த 8வது ஊதிய குழு? அமைச்சர் பதில்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் சம்பளம், அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதற்கான 8 வது ஊதியக் குழு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
8 வது ஊதியக்குழு:
7வது ஊதிய குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதாவது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமும், ஜூலை மாதமும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. தேசிய அளவில் பணவீக்க விகிதம் உயர்ந்துள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அல்லது 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.
NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!
மேலும், கடந்த சில நாட்களாக அரசு துறைகளில் 8வது ஊதிய குழு குறித்து விவாதம் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. அதாவது எட்டாவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றத்தை காண முடியும். ஊழியர்களின் ஊதியத்தை தீர்மானிப்பதில் பிட்மெண்ட் பேக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. பிட்மெண்ட் பேக்டரை சீரமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பிட்மெண்ட் பாக்டரின் அடிப்படையில், திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் பழைய அடிப்படை ஊதியத்தில் இருந்து கணக்கிடப்பட்டு புதிய ஊதியம் நிர்ணயிக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலவன்ஸ்கள் மற்றும் ஓய்வூதியங்களைத் திருத்த 8வது மத்திய ஊதியக்குழு இல்லை என்ற கூற்றை மத்திய அரசு மறுத்துள்ளது. அதாவது “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றியமைக்க 8வது மத்திய ஊதியக் குழுவை (சிபிசி) அமைக்க வேண்டாம் என்று அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்பது உண்மையா” என்ற கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்தார். அதாவது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களை மறுபரிசீலனை செய்ய மற்றொரு ஊதியக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.