தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உருமாறிய வகையான ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முழுவதுமாக கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் பரவல்:
கொரோனா தொற்றின் முதல் அலை பரவல் நாட்டில் கடந்த 2020 ம் ஆண்டு தொடக்கம் முதல் ஆரம்பித்தது. அதன்பின்னர், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்டமாக அரசின் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டது. அதன்பின்னர், தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதிக அளவில் கிடைக்க தொடங்கிய பின்னர், அனைவரும் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் முதல் அலை குறைந்து இயல்பு நிலை மெல்ல திரும்ப தொடங்கிய நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தமிழ்கத்தில் பரவத்தொடங்கியது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” செட்டில் புகுந்த மழை நீர் – வெளியான இன்ஸ்டா வீடியோ!
இரண்டாம் அலையின் பரவல் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும், தொற்று பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் அரசு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த தொடங்கியது. பல முறை சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவினால் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு சமீப மாதங்களாக குறைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து புதிதாக உருமாறியுள்ள ஒமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிக அளவில் பரவ தொடங்கியுள்ளது.
டிகிரி முடித்தவரா? – சென்னை Ericsson நிறுவன காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டத்தில் இதுவரை 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளாத 10,86,500 பேர் பொது இடங்களாக உள்ள தியேட்டர்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட 18 இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் மக்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட sms செய்தியை காண்பிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவரால் பொது இடங்களுக்கு தடையை மீறி வந்தால் அபராதம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.