2 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!
இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் 2 லிருந்து 17 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த முயற்சித்து வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா அவசர கால பயன்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்ட் உள்ளிட்ட தடுப்பூசிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மூன்றாம் கட்ட ஆய்வுக்கு பின்னாக கோவாக்சின் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு தயார் செய்யப்படும் என முன்னணி நுரையீரல் நிபுணரும், அரசு பணிக்குழுவின் முக்கிய உறுப்பினரும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனருமான டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 3 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 50,848 பேருக்கு தொற்று!
பைசர்-பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி குழந்தைளுக்கானதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். முன்னதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனைகள் துவங்கியுள்ளது. அதாவது ஜூன் 7 ஆம் தேதி முதல், 2 லிருந்து 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் கட்ட தடுப்பூசி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர குழந்தைகள் மீதான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையின் 2, 3 ஆம் கட்ட சோதனைக்கு DCGI அனுமதி வழங்கியது.
TN Job “FB Group” Join Now
குழந்தைகளின் உடலில் ஆன்டிபாடி உற்பத்தி குறித்த செரோ ஆய்வுகளை சுட்டிக்காட்டிய டாக்டர் குலேரியா, கொரோனா தொற்றால் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று நம்புவதற்கு சான்று இல்லை என கூறுயுள்ளார். குழந்தைகளும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்றாலும் அவர்களுக்கு ஓரளவு இயற்கை முறையான பாதுகாப்பு கிடைக்கும் என கூறியுள்ளார். இந்த ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் மூலம் கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்காது என்பதை உறுதி செய்துள்ளது.