இந்தியாவில் 3 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 50,848 பேருக்கு தொற்று!
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அரசு தடுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் தொற்று மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசு நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தற்போது வைரஸ் தொற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் தனி அலுவலர் பதவிக்காலம் – டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!
தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 50,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதங்களை விட பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுவரையில் இந்தியாவில் 3 கோடியே 28 ஆயிரத்து 709 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,43,194 ஆக உள்ளது. தினசரி கொரோனா பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,358 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக நாட்டில் இதுவரை 3,90,660 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 68 ஆயிரத்து 817 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 94 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 54,24,374 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.