நாட்டின் தினசரி பாதிப்பு 4,000 ஐ கடந்து புதிய உச்சம் – தீவிரமாகும் நடவடிக்கைகள்!
இந்திய நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கைகள் அரசு அறிக்கையாக வெளியாகி வரும் நிலையில், கடந்த 24 மணி நேர பதிவுகள் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
கொரோனா தொற்றின் பரவல் கடந்த மாதம் முதல் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், மீண்டும் முகக்கவசம் அணிந்து தான் மக்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய பாதுகாப்பு அம்சங்களையும் மீறி கொரோனா பாதிப்பு சரசரவென அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நாளை (ஏப்.06) பொதுத்தேர்வு துவக்கம் – மின்தடை கிடையாது!
இந்நிலையில், கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்புகள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலவரத்தின் படி தற்போது மொத்தம் 23,091 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
Exams Daily Mobile App Download