தமிழகத்தில் நாளை (ஏப்.06) பொதுத்தேர்வு துவக்கம் – மின்தடை கிடையாது!
தமிழகத்தில் நாளை முதல் (ஏப்.06) 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உதவும் வகையில் மின்தடை செய்யாமல் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.
மின்தடை:
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை அளிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகளின் காரணமாக அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மின்தடை குறித்து இணையதளத்தில் முன் கூட்டியே பதிவிடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக பெரும்பாலான பகுதிகளில் மின்தடை செய்யப்படவில்லை.
Follow our Instagram for more Latest Updates
மற்ற வகுப்புகளை தொடர்ந்து நாளை முதல் (ஏப்.06) 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்த நேரத்தில் மாணவர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்கள் படிக்க ஏதுவாக இன்று எந்த பகுதிகளிலும் மின்தடை செய்யப்படவில்லை. அதே போல நாளையும் மின்தடை செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download