தமிழகத்தில் பள்ளிகளை திறந்ததால் அதிகரிக்கும் கொரோனா? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் பள்ளிகளை திறந்ததால் அதிகரிக்கும் கொரோனா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பள்ளிகளை திறந்ததால் அதிகரிக்கும் கொரோனா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பள்ளிகளை திறந்ததால் அதிகரிக்கும் கொரோனா? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது பள்ளிகள் திறந்ததன் காரணமாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதாக எழுந்த புகாருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவியதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தமிழகத்தில் நோய் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது நோய் பரவும் விகிதம் குறைந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் போராளிகளின் கோட்டை பஞ்ஷிர்? தளபதி பேட்டி!

அதனை தொடர்ந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். கிண்டி மடுவாங்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இது குறித்து பதில் அளித்துள்ளார். அவர் பேசுகையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கனவே அறிகுறிகள் இருந்ததாகவும் தற்போது அவை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

பள்ளிகள் திறக்கப்பட்டது தொடர்ந்து நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது பொய்யான கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் நோய் பரவும் விகிதம் அதிகரித்து வருவதால் தான் அதன் எல்லையை ஒட்டிய 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். எனவே 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் அதாவது 17 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!