இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மத்திய அரசு அறிவுறுத்தல்!
இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளது.
கொரோனா பரவல்
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று பரிந்துரைத்தது. மேலும் மத்திய அரசு நேரடியாக கட்டுப்பாடுகளை அமல்படுத்தாமல் அந்தந்த மாநில அரசுகளின் வாயிலாக கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டது. அதன்படி குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி கொள்ளலாம் என்று கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தற்போது அனைத்து தொழிற்துறைகளும், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அத்துடன் இந்தியாவில் இந்த மாதத்தில் 4ம் அலை தொடங்க உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக தற்போது இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக தொற்று அதிகம் பரவி வரும் மாநிலங்களில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகக்கவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் கொரோனா பரிசோதனை பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டாயமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.