தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

0
தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் உள்ள ஐஐடி கல்லூரியில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்கி வருகிறது என்று மருத்துவர்கள் கூறிவருகின்றனர் .

கொரோனா தொற்று அதிகரிப்பு:

தமிழ் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தது. மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்ததாக வரவுள்ள பொது தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள சென்னையில் இருக்கும் ஐஐடி கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்று தகவல் வந்தது. அதை தொடர்ந்து, இந்த 10 பேரில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில், அந்த நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறி இருந்தார்.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிக்கை!

இந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியில் மீண்டும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் இதுவரை 2,729 மாதிரிகளின் சோதனை முடிவுகள் வந்துள்ளது என்றும் சென்னை மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!