தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிக்கை!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்றும், குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அறிக்கை:
தமிழகத்தில் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் இணைந்து ஜனவரி மாதத்தில் மூன்றாவது அலையை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. இத்துடன் பள்ளிகள், கல்லூரிகளும் மூடப்பட்டன. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இவற்றில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு உள்நாட்டு உற்பத்தி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியிருந்தது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முதல் டோஸ், 2வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் நேரடி கல்விமுறை அதிகம் பாதிப்பதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டர். இதன்படி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. தொடர்ந்து12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதே போல 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான முடிவு ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7 ஆம் தேதி வெளியாகிறது.
மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை – அரசு அதிரடி அறிவிப்பு!
பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக தேர்வுத் துறை முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்தத் தேர்விற்கான வினாக்கள் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத் திட்டத்தில் (குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும். பாடத்திட்ட விவரங்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டு உள்ளது.