தமிழகத்தில் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் – தலைமை செயலாளர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மாநிலம் முழுவதும் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பள்ளிகள் (12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் மற்றும் காவலர்கள் மக்களை மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் தடுப்பூசியை செலுத்துவதற்காக சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 54.78 லட்ச தடுப்பூசிகள் மத்திய அரசிடம் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏற்பாடுகள் – கல்வித்துறை தீவிரம்!!
இதனால் அனைத்து வகையிலும் மக்களை பாதுகாக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை குறைப்பது குறித்து தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று மிக தீவிரமான முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவைக்கேற்ப கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.