தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏற்பாடுகள் – கல்வித்துறை தீவிரம்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வை நடத்த அரசு உத்தரவிட்டது. தற்போது அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் உயர்கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டது. பின்பு அடுத்த சில தினங்களில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் ஏப்ரல் மத்தியில் கொரோனா உச்சம் அடையும் – விஞ்ஞானிகள் கணிப்பு!!
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த மாதம் தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் காலவரையற்ற விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்வை எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்தனர்.
TN Job “FB Group” Join Now
பிளஸ் 2 மாணாக்கர்களுக்கு வருகிற மே மாதம் 3ம் தேதி முதல் பொதுத்தேர்வு துவங்கவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த மாதம் 16 முதல் 23ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற செவ்வாய்கிழமை அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர் விடுமுறை – கல்வித்துறை ஆலோசனை!!
பொதுத்தேர்விற்கு இன்னும் 1 மாத காலமே உள்ளது. அதில் செய்முறை தேர்விற்காக 1 வாரம் சென்று விடும். இந்நிலையில் பொதுதேர்விற்கான காலஅவகாசம் மிக குறைவாக இருப்பதால் பொதுத்தேர்வு விடைத்தாளுக்கான முகப்பு பக்கம் வைத்தல், செய்முறை தேர்விற்கான மதிப்பெண்கள் வழங்கல் உள்ளிட்ட வேலைகள் உள்ளது. எனவே தேர்தல் முடிந்ததும் இது குறித்து ஆசிரியர்களிடம் கூட்டம் நடத்தி பணிகளை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.